உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்

சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. சிவகாசியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே., 22 ம் தேதி காலை 11.30 மணிக்கு நாட்கால் செய்து இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேளதாளத்துடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் பட்டர் சுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். செயல் அலுவலர் முருகன் உடன் இருந்தார். பிரமோற்சவ திருவிழா 11 நாட்கள் வரை நடை பெற்று ஜூன் 5 ம்தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகிறது. தினமும் சுவாமி புறப்பாடு, ரிஷப, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !