நகரி தொப்பையம்மன் கோவிலில் விழா
ADDED :3240 days ago
நகரி : தொப்பையம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சித்தூர் மாவட்டம், ஏகாம்பரகுப்பம் கிராம தேவதையாக விளக்கும் தொப்பையம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் விழா, கடந்த, 2ம்
தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், காலை, 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பின், மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல்
வைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.