அங்க பிரதட்சண தத்துவம்
ADDED :3364 days ago
முப்பத்து முக்கோடி தேவர்கள், யோகிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் கோவில்களுக்கு மறைமுகமாக வந்து சுவாமியை வணங்கிச் செல்வர் என்பது ஐதீகம். அவர்களின் திருப்பாதம் பட்ட இடத்தில், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான உடல் படும்படியாக உருண்டு வந்தால் நமது பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.எனவே தான், நேர்த்திக் கடனாக அங்க பிரதட்சிணம் செய்யும் வழக்கம் உள்ளது.