உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், நேற்று, திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு, காலை 9:30 மணிக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர், மாலை 5:30 மணிக்கு, மாட வீதிகளில், வீதி உலா வந்தார். திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில், பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில், ஜலநாராயணருக்கும், கொண்டமாபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், உள்ள ராமருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மீஞ்சூர், அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் கோவிலில், பிரபந்த பாராயணத்துடன் பெருமாள் உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !