மாளிகைப்புறத்தம்மையின் திருவாபரணம்
ADDED :5199 days ago
சபரிமலையில் மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும். மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் உண்டு. இதை தனியாக ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஐயப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும். பொங்கலை ஒட்டி மகரஜோதி விழா முடிந்தபிறகும் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் கதாநாயகி மாளிகைப்புறத்தம்மன் தான். இவள் ஐயப்பனை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன், தனது சந்நிதியில் இருந்து பவனி வருவாள்.