ஷிரடி சாய்பைரவர் கோவிலில் குருபூர்ணிமா விழா
ADDED :3009 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள ஷிரடி சாய்பைரவர் கோவிலில், குருபூர்ணிமாவையொட்டி மழை வேண்டி, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு ஆரத்தி, பூஜை நடந்தது. தொடர்ந்து தவனமஞ்சரி பூஜையும், காலை, 10:30 மணிக்கு சாய் சத்சரிதம் பாராயணத்தை சாய் பக்தர்கள் வாசித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.