உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரியிடமும் அன்பு

எதிரியிடமும் அன்பு

சாலையில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வேண்டாத ஒருவன் வந்து உங்களை இடித்து விட்டான் என்றால் என்ன செய்வீர்கள்? ஏண்டா கண்ணு தெரியலே! வேணுமினே இடிச்சுட்டு போறே. வம்பு இழுக்கிறியா? என்று கேட்டு சண்டை போடுவீர்கள். சில சமயங்களில் கைகலப்பு கூட வந்து விடும். ஆனால் நபிகள் நாயகம் இதுபோன்ற சமயங்களில் பொறுமையாக இருப்பார். ஒருநாள் நாயகம் தெருவில் நடந்து சென்ற போது, எதிரி ஒருவன் வேகமாக வந்தான். நாயகத்தின் மீது மண்ணை வாரி இறைத்தான். அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டார். இதைக்கண்ட அவரது மகள் பாத்திமா மனம் கலங்கி தந்தையின் உடலை பாசத்தோடு கழுவி விட்டார். உங்களை எதிரிகள் என்ன செய்வார்களோ? தெரியவில்லையே என அழுதார். எதற்காக அழுகிறாய். உன் தந்தையை இறைவன் காப்பாற்றுவான் என்றார் நாயகம். தனக்கு துன்பம் செய்த எதிரியை நாயகம் திட்டக்கூட செய்யவில்லை. அந்தளவுக்கு பொறுமையாக நடந்து கொண்டார். தன் எதிரிகளை கவனிக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !