சுப்பிரமணி சுவாமி கோயிலில் முருகன் உலா
ADDED :3133 days ago
பேரையூர், பேரையூர் மேலப்பரங்கிரி சுப்பிரமணி சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகன் உலா நடந்தது. கோயிலில் இருந்து அரண்மனை வீதி, மெயின் பஜார், உசிலை ரோடு வழியாக முக்குச்சாலை வரை சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை முருகன், பால்ராஜ், சபாபதி செய்திருந்தனர்.