மேற்கு நோக்கிய குருபகவான்
ADDED :3083 days ago
சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள வலிதாயநாதர் கோயிலில் குருபகவான் மேற்கு (வழக்கமாக வடக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். தான் செய்த தவறுக்காக, சகோதரனின் மனைவியான மேனகையிடம் சாபம் பெற்றார் குரு. அதில் இருந்து விடுபட, இங்குள்ள சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். ஞான சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற இத்தலத்தை சுற்றி 11 தேவார தலங்கள் உள்ளன.
தொடர்புக்கு: 044 – 2654 0706