செல்வப் பிள்ளை பத்திரம்!
ADDED :3013 days ago
கர்நாடகாவில், பிரபலமான ஸ்தலம் மேல்கோட்டை, இங்கு உறையும் நாராயணப் பெருமான் மற்றும் செல்வப்பிள்ளை ஆகியோர் காண வேண்டிய தெய்வங்கள். இங்கு இராமானுஜர் பல வருடங்கள் வாழ்ந்துள்ளார். அவருக்கு நாராயணப் பெருமான் மற்றும் செல்வப் பிள்ளை மீது அபரிமிதமான பக்தி, இதனால் இங்கு ராமானுஜர் தன் கைப்பட எழுதிய சுவடி ஒன்று இன்றும் உள்ளது. அந்தச் சுவடியில், நாராயணப் பெருமான் மற்றும் செல்வப் பிள்ளையை மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும் என எழுதி கையெழுத்தும் போட்டுள்ளார் ராமானுஜர்.