செல்வ விநாயகர் கோயிலில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை
ADDED :2987 days ago
செக்கானுாரணி:செக்கானுாரணி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செப்.3ம் தேதி நடந்தது. இதையடுத்து செப்., 5ல் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. மதுரை திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி தலைவர்விசாலாட்சி தலைமையில் மழை வேண்டியும், மக்கள் வளம் செழிக்கவும் நடந்த பூஜையில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.