உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் குப்பை: முகம் சுளிக்கும் பக்தர்கள்

பூமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் குப்பை: முகம் சுளிக்கும் பக்தர்கள்

நரிக்குடி: திருச்சுழி கோயில் வளாகத்திற்குள் குப்பை  கொட்டுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. பூமிநாத சுவாமி  கோயில்  உள்ள திருச்சுழியை  சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு  சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இங்கு   நகர் , கிராம மக்களைத் தவிர வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமானோர் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடு இருப்பதால் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவர். இது தவிர கோயிலில் தினமும் பூஜை நடக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கோவில் வளாகத்திலே  பாலிதீன் பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை   கொட்டி வைத்துள்ளனர்.  கோயில் கழிவுகளையும்  இங்கேயே கொட்டி உள்ளனர்.

இது தவிர சிலர் கோவிலில் அமர்ந்து சாப்பிடுவர். இந்த கழிவுகளையும் கோயில் வளாகத்திற்குள் கொட்டுகின்றனர். இதனால் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். மன நிம்மதிக்காக கோயிலுக்கு வந்தால் , இங்குள்ள குப்பையை பார்த்தவுடன் இருக்கிற நிம்மதியும் போய் விடுகிறது என்கின்றனர். தற்போது மழை வேறு பெய்வதால் குப்பைகள் கிளறப்பட்டு அதிகளவில் துர்நாற்றத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கோயில் வளாகத்திலாவது பக்தர்கள் குப்பை  கொட்டாமல் சுகாதாரத்தினைக் காக்க வேண்டும். கோயில் நிர்வாகம் தினமும் குப்பை  அகற்றிட முன் வர வேண்டும். விளாத்திகுளம் ராமமூர்த்தி, ‘‘குருபெயர்ச்சிக்கு இங்கு தரிசனம் செய்வதற்காக நீண்ட துாரத்திலிருந்து  வந்துள்ளோம். மன நிம்மதியைத் தேடி கோயிக்கு வந்தால் தொற்று நோயினை தேடி வந்தது போல் உள்ளது. கோயில் உள்ளே நுழைந்தவுடனே குப்பைதான்  வரவேற்கிறது. குப்பையை  அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் ,’’என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !