உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி முதல்நாள் வழிபாடு

நவராத்திரி முதல்நாள் வழிபாடு

நவராத்திரி முதல்நாள் அம்பிகையை மகேஸ்வரியாக, மது, கைடபர் ஆகிய அரக்கர்களை வதம் செய்த கோலத்தில் அலங்கரிக்க வேண்டும். இரண்டு வயது சிறுமியை அலங்கரித்து குமாரி என்னும் பெயரில் அம்பாளாகக் கருதி பூஜிக்க வேண்டும். பூஜையறையில் அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக்கோலம் இட வேண்டும். மல்லிகை, செவ்வரளி, வில்வமாலைகளை அம்பிகைக்கு சூட்டி, வெண்பொங்கல், சுண்டல், வாழைப் பழம், எலுமிச்சை சாதம், தயிர்ச்சாதம், மொச்சை நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் செல்வவளம் பெருகும். தீர்க்காயுள் உண்டாகும். நவராத்திரி முதல்நாள் மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

பாட வேண்டிய பாடல்:
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்என் புந்தியில் எந்நாளும் பொருந்துகவே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !