வடசிறுவளூர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :3019 days ago
திண்டிவனம்: வடசிறுவளூர் நாச்சியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே உள்ள வடசிறுவளூர் நாச்சியம்மன் கோவிலில், மகாளய அமாவாசை உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பூ அலங்காரத்துடன், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்தனர் . ண்ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.