நவராத்திரி கோலாகலம்... : சென்னை சவுகார்பேட்டையில் துர்கா பூஜை
ADDED :3064 days ago
சென்னை: நவரத்திரியை முன்னிட்டு, சென்னை சவுகார்பேட்டையில் துர்கா சிலை வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர்.
சென்னையில் வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், புரசைவாக்கம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில், விநாயகர் சதுர்த்தியைப் போல, நவராத்திரி ஸ்பெஷலான துர்கா பூஜையும், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சவுகார்பேட்டையில் நடைபெற்ற துர்கா சிலை வழிபாட்டில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.