உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம். அதனால் புரட்டாசியில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும், பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள். பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் வருகைக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !