முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :3044 days ago
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு தனி அலங்காரம் செய்யப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு, சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.