குலசையில் இன்று சூரசம்ஹாரம்: லட்சம் பக்தர்கள் குவிகின்றனர்
துாத்துக்குடி:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் இன்று இரவு சூரசம்ஹாரம்நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில்தசரா திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பக்தர்கள் காப்பு அணிந்து, விரதத்தை துவக்கினர். பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 9ம் திருநாளான நேற்று வெள்ளிக்கிழமை அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10ம் திருநாளான இன்று சனிக்கிழமை இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. குலசேகரன்பட்டினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று இரவில் குவிவதால் பஸ் வசதி, போலீஸ் பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.