உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமைத்தலை ஏன்?

எருமைத்தலை ஏன்?

மகிஷாசுரனை அழித்ததால், அம்பாளுக்கு மகிஷாசுரமர்த்தினி’ என்ற பெயர் உண்டு. இந்த அசுரனை, எருமைத்தலை கொண்டவனாக  சித்தரித்தது ஏன் தெரியுமா? எருமை மந்த குணம் உடையது. வெயிலோ, மழையோ எதையும் கண்டு கொள்ளாது. பிள்ளைகளை  பெற்றவர்கள் அடிக்கும் போது, அசையாமல் இருந்தால், “உனக்கென்ன எருமைத்தோலா?” என்று கேட்பது வழக்கம். அதே நேரம்  எருமைக்கு கோபம் வந்து விட்டால் கண்டபடி பாயும். மனிதனுக்கு எருமை போல் மந்த குணமும் ஆகாது, ஆவேசமும் கூடாது. இது  இரண்டும் வரும் போது, அம்பாளை நினைத்துக் கொண்டால், அதிலிருந்து விடுவிப்பாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !