ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் 108 புடவை சார்த்துதல் நிகழ்ச்சி
ADDED :5059 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு, 108 போர்வை சார்த்துதல் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அர்த்த சாம பூஜைக்குப் பின், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் புறப்பட்டு, கோபால விலாசம் செல்லுதல் நடந்தது. தொடர்ந்து, ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வாருக்கு, 108 புடவை சார்த்துதல் நடந்தது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரையர் வியாக்யானம், வேதபிரான் பட்டர் வேத புராணம் வாசித்தலும் நடந்தது. பின், வேதபிரான் பட்டர் மேள தாளத்துடன், அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் நடந்தது. ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் உட்பட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.