நோய் தீர்க்கும் சந்தனம்
ADDED :3110 days ago
ஒருமுறை சூரபத்மனுடன் போரிட்ட முருகனுக்கு, மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடனே அவர் அமர்ந்த தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனம் பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் உள்ளது.