உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்!

திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீர்த்த உற்சவம் நடந்தது. கோயிலில் நவ. 30ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்றுமுன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. உற்சவர் சன்னதியில் விநாயகர், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, அஸ்தர தேவர், தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். உச்சிகால பூஜை முடிந்து சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடாகி சரவணப்பொய்கையில் எழுந்தருளினார். அங்கு அஸ்தர தேவருக்கு பூஜைகள் முடிந்து, சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !