திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விளக்கு
ADDED :2901 days ago
திருவண்ணாமலை மக்கள் கார்த்திகை திருநாள் அன்று கிரிவலப்பாதையில் விளக் கேற்றுவர். மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தின் ஜோதி, தாங்கள் ஏற்றிய விளக்கு களிலும், படிவதாக நம்புகின்றனர். அந்த விளக்குகளை வீடுகளுக்கு எடுத்து வந்து ஏற்றுகின்றனர். உறவினர்களுக்கும் வழங்குகின்றனர். இதனால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என நம்புகின்றனர்.