திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா கோலாகலம்
திருவள்ளுர்: திருவள்ளுர் அடுத்த திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் இலட்ச தீபத் திருவிழா நடந்தது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது.
திருமழிசை : திருமழிசை, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், நேற்று (டிச.11ல்) 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடந்தது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் அமைந்துளளது குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு, கார்த்திகை மாத நான்காவது சோமவார திருவிழாவை முன்னிட்டு. லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு லட்ச தீப திருவிழா, நேற்று (டிச.11ல்) நடந்தது. முன்னதாக, 10ம் தேதி, காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது. பின், மாலை, 6:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தானமும், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மறுநாள், 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 7:15 மணிக்கு, மகா அபிஷேகமும், காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், நடைபெற்றது. பின், மாலை, 6:00 மணிக்கு, லட்ச தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது. அதை தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.