சொர்ண காளீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2958 days ago
காளையார்கோவில்:காளையார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஹோமம், ருத்ரயாகம் மற்றும் 16 வகை அபிேஷகங்கள் நடைபெற்றன. அதன்பிறகு 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சங்காபிஷேம் நடந்தது. இதே போல், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.