செல்வம் நிலைத்திருக்க திருப்பாவை பாடுங்க!
ADDED :5170 days ago
சம்பாதித்த பணமெல்லாம் வீணாய் போகிறதே... என கவலைப்படுபவர்கள், அது நிலைத்திருக்க திருப்பாவை பாடுங்கள். ஆண்டாளின் வளர்ப்புத்தந்தையான பெரியாழ்வார், நந்தவனத்தில் ஒருநாள் துளசிச் செடிக்கு அருகில் பூமிதேவியின் அம்சமாக குழந்தை வடிவில் ஆண்டாளை கண்டெடுத்தார். வாரிஎடுத்து, மார்போடு அணைத்து கொண்டு மகிழ்ந்தார் பெரியாழ்வார். கோதை என்று பெயரிட்டார். உலகம் நிறைக்கும் புகழுடன் திருமகள் போல வளர்த்தார். ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியாகவும், அங்குள்ள வடபெருங்கோயிலை கண்ணன் வளர்ந்த நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள வடபத்ரசாயி பெருமாளை கண்ணனாகவும் எண்ணி பாவைநோன்பு நோற்றாள். அவர்கள் பாடுவது போல முப்பது பாடல் பாடினாள். இதனைப் பாடுவோர் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் என்கிறாள். திருப்பாவை பாடுவோர், நிலைத்த செல்வம் பெறலாம்.