ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர் உலா
ADDED :2864 days ago
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் துவங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், எட்டாம் நாளான நேற்று, ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, குதிரை வாகனத்தில், கோவிலை சுற்றி சுவாமி வலம்வந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.