பிரதோஷத்தில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசிப்பது ஏன்?
ADDED :2958 days ago
சிவபெருமான் தினமும் மாலை நேரத்தில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடனம் புரிகிறார். பகலில் அல்லல்படும் உயிர்களின் மனச்சோர்வு நீங்கவும், இரவு நிம்மதியாக உறங்கவும் இப்படிச் செய்கிறார். அந்த வேளையில் அவரை வழிபட்டால் கவலைகள் நீங்கும். பிரதோஷத்தன்று மாலையில் வழிபடுவது இன்னும் சிறப்பு.