திருமாங்கல்யத்தில் லட்சுமிகாசு, மணி கோர்ப்பதன் நோக்கம் என்ன?
ADDED :3025 days ago
திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்தில் மணப்பெண்ணுக்கு சுமங்கலிகள் நடத்தும் சடங்கு தாலி பெருக்குதல். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது, மங்கல ஆபரணமான தாலியோடு லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.