சங்ககிரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED :3099 days ago
சங்ககிரி: சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள, மாரியம்மன், பேச்சி பெரியாண்டியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 9ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. நேற்று நடந்த தீ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், சுவாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர்.