மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3088 days ago
பேரையூர்: பேரையூர் அருகே பெரியசிட்டுலொட்டி விநாயகர், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தது. பழமையான இக்கோயில் சமீபத்தில் பல லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இரு நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தன. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோயில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழு நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், செல்வராஜ், கண்ணன், கோபால கிருஷ்ணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.