உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?
ADDED :5281 days ago
நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.