உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கடற்கரையில் வைகுண்டர் அவதார தினம்

திருச்செந்தூர் கடற்கரையில் வைகுண்டர் அவதார தினம்

துாத்துக்குடி: திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நேற்று நடந்தது.திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகபடிப்பு, காலை 6:00 மணிக்கு அன்னதர்மம், மதியம் 12:00 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, பகல் ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலையில் பணிவிடை, அய்யா புஷ்பவாகன பவனி ஆகியவை நடந்தது. இரவில் அவதார தினவிழா நடந்தது. சாமிதோப்பு பால பிரஜாதிபதி அடிகள் ஆசியுரை வழங்கினார். இரவில் குரு சிவசந்திரனின் அருளிசை வழிப்பாடு, செந்தில்குமார் தலைமையில் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. சூரிய உதயத்தின் போது கடலில் பதமிடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அவதாரவிழா பணிவிடையும், அன்னதர்மம், இனிமம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அய்யாவழி மக்கள் சபையினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !