சுவாமி எதிரில் நிற்காதீர்
ADDED :2806 days ago
கோயிலில் மூலவருக்கு எதிரில் நின்று வழிபடக் கூடாது. ‘சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி’ என்கிறார் காஞ்சிப்பெரியவர். சுவாமியின் வலம், இடது புறம் நின்றே வழிபட வேண்டும். அப்போது அவரது கடைக்கண் பார்வை நம் மீது விழும். இது கருணையும், குளிர்ச்சியும் கொண்டது. அம்பிகையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கல்வி, ஆயுள், உடல்நலம், செல்வம், தளராத மனம், தெய்வீக வடிவம், நல்ல நண்பர்கள் என பல நன்மைகள் உண்டாகும்.