திருவள்ளூர் சாய்ராமிற்கு பழங்களால் அலங்காரம்
ADDED :2872 days ago
திருவள்ளூர்: ராமநவமியை முன்னிட்டு, ஆனந்த சாய்ராமிற்கு, காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், ராமநவமி, கடந்த 19ம் தேதி துவங்கியது. நேற்று, காய்கறி, பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12:00 மணியளவில், சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சாய்ராமை வழிபட்டனர். இன்று, காலை, 8:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும, மாலை, 4:00 மணிக்கு சாயி சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும். இன்று, மாலை, நாட்டியப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சியும் இரவு, ராமநவமி திருவிழா கொடிகளுடன் ஓம் ஸ்ரீஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வருகிறார், வரும், 28ம் தேதி வரை, ஆனந்த சாய்ராமிற்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பஜனைகள் நடைபெறுகின்றன.