அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
ADDED :2794 days ago
புதுச்சேரி: பெரிய இருசாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மயானக்கொள்ளை விழா நடக்கிறது. கிளிஞ்சிக்குப்பம் மதுரா பெரிய இருசாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று மயானக்கொள்ளை விழா நடக்கிறது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு மயானக்கொள்ளை விழா நடக்கிறது. குதிரை வாகனத்தில் பாவாடைராயன் சுவாமியும், மின் விளக்கு அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.