உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக நரசிம்மர் திருவீதியுலா

யோக நரசிம்மர் திருவீதியுலா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளில், கரிவரதராஜ பெருமாள், சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் பிரமோற்சவ விழாவையொட்டி, தினந்தோறும் மாலை, 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம், கோவிலில் இருந்து சிம்மவாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளிய கரிவரதராஜ பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !