ஸ்ரீபெரும்புதூரில் காமதேனு வாகனத்தில் பூதபுரீஸ்வரர் வீதியுலா
ADDED :2795 days ago
ஸ்ரீபெரும்புதூர் : காமதேனு வாகனத்தில், பூதபுரீஸ்வரர் திருவீதியுலா நடந்தது.
ஸ்ரீபெரும்புதூரில், பழமை வாய்ந்த சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரம் நடக்கிறது. விழாவின், 9ம் நாளான நேற்று 29ல் காலை, காமதேனு வாகன த்திலும், மாலை, இந்திர விமான வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, வீதியுலா சென்று, பக்த ர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.