சென்னை, வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில்,ஆதிசேஷ நாராயணனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்
வானகரம்: மச்சக்கார பாலமுருகன் கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதிக்கு, நேற்று(மார்ச் 30)ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை, வானகரம் மேட்டுக்குப்பத்தில், மச்சக்கார பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர், முருகப்பெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் உள்ளது.
எனவே இவரை, மச்சக்கார பாலமுருகன் என, பக்தர்கள் அழைக்கின்றனர்.
இத்தல முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்ப தும், நம்பிக்கையாக உள்ளது.
இக்கோவிலில், சக்ர விநாயகர், வானதீஸ்வரர், ஸ்வர்ணா கர்ஷண பைரவர், யோக ஆஞ்ச நேயர், சாய் பாபா, விஷ்ணு துர்கை ஆகிய சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில், ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதி நிர்மாணிக்கும் பணி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில், 7 அடி உயரத்தில், ஆதிசேஷன் குடையாக நிற்கும் வடிவில் உள்ள பெருமாள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நேற்று (மார்ச் 30) காலை, 8:00 மணிக்கு, ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்ன திக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு, 108 பால்குட விழா நடைபெற்றது.