காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணி தேரோட்டம்
ADDED :2787 days ago
கடலுார்: கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணித் தேரோட்டம் நடந்தது. கோவிலில், கிண்ணித் தேர் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு கிண்ணித் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை 2ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு உற்சவம், 3ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.