கல்யாண வீட்டில் காசியாத்திரை சடங்கு அவசியமா?
ADDED :3045 days ago
அவசியமே. வேதம் படித்த இளைஞர்கள் வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து புனித தலமான காசியில் தவமிருக்க விரும்புவர். மண வாழ்வில் ஈடுபடாமல் துறவியாகும் சிலர், தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே, துறவறம் ஏற்பது நல்லது என பெரியவர்கள் மணம் செய்து வைப்பர். அந்தக் காலத்தில் உணர்வு பூர்வமாக நிகழ்ந்தது இது.