குப்பைக்கு போன தங்கம்
ADDED :2787 days ago
திருநாவுக்கரசர் முக்தி பெற்ற சிவத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருப்புகலூர். இங்கு அக்னிபுரீஸ்வரராக சிவன் கோயில் கொண்டிருக்கிறார். சுவாமியின் திருமேனி சற்று சாய்ந்திருப்பதால் ‘கோணப்பிரான்’ என்றும் பெயருண்டு. நாவுக்கரசர் இக்கோயிலை சுத்தப்படுத்திய போது, சோதிக்க எண்ணிய சிவன் பிரகாரத்தில் பொன்னும், நவமணிகளும் சிதறி கிடக்கச் செய்தார். நாவுக்கரசர் சிறிதும் மயங்காமல், கையில் இருந்த உழவாரக் கருவியால் தள்ளி விட்டு நடந்தார். பொன்மனச் செம்மலான திருநாவுக்கரசர் மகிழும் விதத்தில் சிவ பெருமான், அம்பிகை உடன் காட்சியளித்தார்.