உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்குரு தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!

சத்குரு தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!

தஞ்சாவூர்:திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 165வது ஆராதனை விழா, இன்று (9ம் தேதி) கோலாகலமாக துவங்குகிறது.திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா சார்பில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 165வது ஆராதனை விழா, இன்று மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. திருப்பதி தேவஸ்தான சேர்மன் கண்மூரிபாசி ராஜூ, குத்துவிளக்கேற்றி ஆராதனை விழாவை துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் வாசன், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன், ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார், செயலர் ஹரித்துவாரமங்கலம் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.தொடர்ந்து 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 12ம் தேதி, காலை 6 மணி முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோற்சவ சபையின் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை, 13ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு பஞ்சரத்ன மல்லாரியுடன், தியாகராஜ சுவாமி திருவுருவச்சிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !