அள்ளித்தரும் சுந்தரவல்லி
ADDED :2764 days ago
பெருமாள் கோயில்களில் குங்கும பிரசாதம் தரப்படும். ஆனால், அழகர் கோவிலில் கஸ்தூரி மஞ்சளை பிரசாதமாக வழங்கு கின்றனர். மஞ்சள் மங்கலத்தின் சின்னமாகும். இங்குள்ள கல்யாண சுந்தரவல்லித் தாயாரிடம் வேண்டினால் திருமணத்தடை நீங்கும். மணமானவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பதன் அடிப்படையில் மஞ்சள் வழங்கப்படுகிறது. மூலவர் கள்ளழகரின் வலப்புறம் தனி சன்னிதியில் கல்யாண சுந்தரவல்லி தாயார் வீற்றிருக்கிறார். திருமணம் ஆகாத பெண்கள் இவரை ஏழுமுறை வலம் வந்து மலர்களைப் படைத்து வேண்டிக் கொள்கின்றனர்.