திருநீர்மலையில் நாச்சியார் கோலத்தில் நீர்வண்ண பெருமாள் உலா
ADDED :2754 days ago
திருநீர்மலை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை பெரு விழாவை முன்னிட்டு, ஐந்தாம் நாள் விழாவில் நீர்வண்ண பெருமாள் நாச்சியார் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்தாண்டு விழாவில், ஐந்தாம் நாளில் நீர்வண்ண பெருமாள் நாச்சியார் கோலத்தில் மலையை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.