நாமக்கல் சர்வ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலை ஆண்டவர் நகரில் அமைந்துள்ள, சர்வ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. கடந்த, 13ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, மோகனூர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு வடிசோறு பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு பால்குடம் எடுத்தல், 9:00 மணிக்கு சர்வ சக்தி மாரியம்மன் திருத்தேரில் வைத்து கோவிலில் வழிபடுதல், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. நாளை காலை, 7:00 மணிக்கு பொங்கல் பூஜை, மாலை, 6:00 மணிக்கு மகளிர் இன்னிசை பட்டிமன்றம் நடைபெறுகிறது. 23 மதியம், 2:00 மணிக்கு சர்வ சக்தி மாரியம்மன் திருத்தேரில் வைத்து வழிபடுதல், மஞ்சள் நீராடுதல், அம்மன் குடிபுகுதல், கம்பம் எடுத்து ஆற்றில் விடுதல் நடைபெறுகிறது. 24 காலை, 9:00 மணிக்கு மறு அபிஷேகம் நடைபெறுகிறது.