பஞ்சபுத்ரா தலம்
ADDED :2739 days ago
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணங்குடி, 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. இறைவன் சியாமளா மேனி பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி லோகநாயகித் தாயார். ஆறு, காடு, நகரம், கோயில், தீர்த்தம் என்ற ஐந்தும் கொண்டு அற்புதமாக அமைந்த தலம் என்பதால் ‘பஞ்ச புத்ரா தலம்’ என்று போற்றப்படுகிறது. மேலும் இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் திருநீறு அணிந்து கொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமானது. இங்கு மட்டும் அதிசயமாக கருடன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். இத்தலத்தில் தாயார் சன்னதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே அச்சாக இருப்பது அதிசயம்.