மாரியம்மன் கோயில் வைகாசி விழா: பறவை காவடி எடுத்த பக்தர்கள்
ADDED :2953 days ago
காரியாபட்டி : மல்லாங்கிணர் அண்ணாநகர் மாரியம்மன் கோயில் வைகாசி விழா 10 நாட்கள் நடந்தன. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை தீச்சட்டி, பூக்குழி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சுற்று கிராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.