ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக விழா
ADDED :2722 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடந்தது. திருக்கோவிலுார்‚ ஞானானந்தா நிகேதனில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சத்சங்க மண்டப வளாகத்தில் சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு, அன்னதானம் துவங்கியது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவல் குழு தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுவாமி பிரபவானந்தா‚ ஆத்மதத்வானந்தா அம்ருதேஸ்வரானந்தா மற்றும் வேதாந்தம் பயிலும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.