உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா

செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: சஞ்சீவி நகர் செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நடந்த செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சஞ்சீவி நகரில் உள்ள சஞ்சீவி விநாயகர், செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் கோவில்களின் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம், துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு, கெங்கை அம்மனுக்கும், மாரியம்மனுக்கும் கூழ் வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, செடல் உற்சவம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கார், மினி வேன்களை இழுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். நாளை 1ம் தேதி இரவு 8:00 மணிக்கு அர்ச்சுனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாணமும், 2ம் தேதி இரவு கிருஷ்ணன் ரதம் செலுத்த அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலாவும், 3ம் தேதி காலை அர்ச்சுனன் தபசு ஏறுதலும் நடக்கிறது. அன்றிரவு 10:00 மணிக்கு கிருஷ்ணன், அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலா மற்றும் அரவாண் களபலி நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !